Local Swiss News

ஆல்ப்ஸ் மலையில் கடும் வறட்சி… கால்நடைகளை காப்பாற்ற அவசர நடவடிக்கை!

ஆல்ப்ஸ் மலையில் கடும் வறட்சி... கால்நடைகளை காப்பாற்ற அவசர நடவடிக்கை!

ஆல்ப்ஸ் மலையில் கடும் வறட்சி… கால்நடைகளை காப்பாற்ற அவசர நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தின் ஷ்விட்ஸ் மாகாண ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில், நீடித்து வரும் கடும் வறட்சியால் தண்ணீர் மற்றும் கால்நடை தீவனப் பற்றாக்குறை அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேளாண்மை அலுவலகத்தின் தகவலின்படி, ஷ்விட்ஸ் மாகாணத்தில் 420-க்கும் மேற்பட்ட மலைப்பகுதி பண்ணைகளில், கோடைக்காலத்தில் சுமார் 15 ஆயிரம் மாடுகள், பசுக்கள் மற்றும் கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

6a 88

ஆனால், மழையின்மை காரணமாக புல்வெளிகள் வறண்டு வருவதால், கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் மற்றும் குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே ஐந்து கால்நடை மந்தைகள், திட்டமிட்ட காலத்துக்கு முன்பே மலை மேய்ச்சல் நிலங்களில் இருந்து பள்ளத்தாக்குகளுக்கு திரும்பக் கொண்டுவரப்பட்டுள்ளன.

நிலைமையை சமாளிக்க, சாலை மார்க்கமாக தண்ணீர் கொண்டு செல்வது, தற்காலிக நீர்க் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து நகராட்சிகளும் நெருக்கடி மேலாண்மைக் குழுவும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

அதேவேளை, பள்ளத்தாக்குப் பண்ணைகளில் உள்ள தீவன இருப்புகளைப் பாதுகாப்பதற்காக, விலங்குகளை முடிந்தவரை நீண்ட காலம் மலை மேய்ச்சல் நிலங்களிலேயே வைத்திருக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button