எச்சரிக்கை: சுவிஸ் போஸ்டிலிருந்து வந்ததாகக் கூறும் போலி கடிதங்கள்
எச்சரிக்கை: சுவிஸ் போஸ்டிலிருந்து வந்ததாகக் கூறும் போலி கடிதங்கள்.!! சுவிஸ் போஸ்ட் (Swiss Post) என்ற போலி கடிதங்கள் தற்போது பரவி வருவதாக ஒப்வால்ட்டன் போலீசார் எச்சரித்துள்ளனர். இந்தக் கடிதங்களில் QR குறியீடு உள்ளது மற்றும் பெறுநர்களிடம் பணம் செலுத்தும்படி கேட்டகப்பட்டுள்ளது.
**முக்கிய எச்சரிக்கைகள்:**
இந்த கடிதங்களில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம். அதை ஸ்கேன் செய்வது நிதி மோசடி அல்லது பிற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளபடி பணம் எதுவும் அனுப்ப வேண்டாம். இது ஒரு மோசடி. எனவே அவ்வாறான கடிதங்களை நீங்கள் பெற்றால் அதற்கு பதிலளிக்காமல் அதனை அழித்துவிடவும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மோசடி ஏற்கனவே இந்த வார தொடக்கத்தில் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி நடவடிக்கைகளுக்கு பலியாகாமல் இருக்கவும், மக்கள் விழிப்புடன் இருக்கவும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
நீங்கள் அத்தகைய கடிதத்தைப் பெற்றால் அல்லது நிச்சயமற்றதாக உணர்ந்தால், உதவிக்கு நேரடியாக சுவிஸ் போஸ்ட் அல்லது பொலிஸை தொடர்பு கொள்ளவும்.
நிதி இழப்புகளைத் தடுக்கவும் சமூகத்தைப் பாதுகாக்கவும் இந்த எச்சரிக்கையை சுவிட்சர்லாந்திலுள்ள உங்கள் உறவுகளுக்கும்; பகிர்ந்து கொள்வது பலரை இவ்வாறான மோசடிகளில் இருந்து தப்பிக்கவைக்க உதவும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். (c) Kantonspolizei Obwalden






