வாட் மாகாணத்தில் பேருந்து விபத்தில் பத்து வயது சிறுவன் பலி
செவ்வாய்கிழமை மாலை வாட் மாகாணத்தில் Forel இல் ஒரு சோகமான விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு 10 வயது சிறுவன் ஒரு தபால் பஸ்ஸில் மோதுண்டு பலியாகியுள்ளார். அவரை காப்பாற்ற முயற்சித்த போதிலும், சிறுவன் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
**விபத்து எப்படி நடந்தது?**
Vaud கன்டோனல் காவல்துறையின் முதற்கட்ட தகவல்களின்படி, பேருந்து ஓட்டுநர் நியமிக்கப்பட்ட பகுதியில் **யூ-டர்ன்** (U Turn) செய்ய முற்பட்ட போது அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த சிறுவன் மீது பேருந்து மோதியது.

**விசாரணை நடந்து வருகிறது**
இந்த துயர சம்பவம் எப்படி, ஏன் நடந்தது என்பதற்கான சரியான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. துல்லியமான சூழ்நிலைகளைத் தீர்மானிக்கவும், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் பொது வழக்குரைஞர் அலுவலகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
**துக்கத்தில் சமூகம்**
இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு அருகில் சாலைப் பாதுகாப்பை உன்னிப்பாகக் கவனிக்குமாறு பெற்றோர்களும் அதிகாரிகளும் அழைப்பு விடுக்கின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க அனைவரும் விழிப்புடன் இருப்போம்.





