வாட் மாகாணத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து 10,000 பிராங்குகள் மோசடி
வாட் மாகாணத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து 10,000 பிராங்குகள் மோசடி
வாட் மாகாணத்தில் மூத்த குடிமகனிடம் இருந்து இரண்டு போலி போலீஸ் பெண்கள் கிட்டத்தட்ட 10,000 பிராங்குகளை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, வாட் மாகாண கன்டோனல் போலீஸ் மோப்ப நாய் பிரிவு மாண்ட்ரீக்ஸ் (Montreux ) மற்றும் வில்லெனுவேவில் (Villeneuve) சந்தேகத்திற்குரிய இரண்டு பெண்களைக் கண்டுபிடித்து அவர்களைக் கைது செய்தது. அவர்களை சோதனை செய்தபோது, பண மூட்டைகள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவை மாண்ட்ரீக்ஸ் (Montreux ) இல் வசிப்பவரிடமிருந்து திருடப்பட்ட பணம் என்பன பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலில் இருந்த 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு பிரெஞ்சு பெண்கள் வாட் கன்டோனல் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இத்தகைய மோசடி முயற்சிகள் சுவிட்சர்லாந்தில் சமீபத்திய வாரங்களில் அதிகரித்துள்ளன. மோசடி செய்பவர்களால் வயதானவர்கள் குறிவைக்கப்படுவதாக போலீசார் எச்சரித்து வருகின்றனர்.
வங்கி அட்டைகள் மற்றும் வங்கி விவரங்கள் மற்றும் ஏனைய அனைத்து பெறுமதியான பொருட்களை எக்காரணம் கொண்டும் தெரியாத நபர்களிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.





