Swiss News In Tamil

சாஃப்ஹாவுஸன் ரயில் நிலையத்தில் காயம் அடைந்த நபர் கண்டெடுப்பு – கொள்ளை சம்பவம் என சந்தேகம்!

சாஃப்ஹாவுஸன் ரயில் நிலையத்தில் காயம் அடைந்த நபர் கண்டெடுப்பு – கொள்ளை சம்பவம் என சந்தேகம்!

வெள்ளிக்கிழமை அதிகாலை, சாஃப்ஹாவுஸன் ரயில் நிலையத்தில் (Bahnhof Schaffhausen) ஒரு 52 வயது ஆண் ஒருவர் காயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். முதற்கட்ட விசாரணைகளின் படி, இந்த நபர் ஒரு கொள்ளைச் சம்பவத்தின் போது தாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை அதிகாலை 4:15 மணியளவில், கிளைஸ் 5 (Gleis 5) பகுதியில், ஒரு ஆண் தவிப்புடன் விழுந்து கிடப்பதாக ஒரு ரயில் ஓட்டுனர் (Lokführer) அவசர அழைப்பு விடுத்தார்.

schafhaussen

தகவல் பெற்றவுடன், சாஃப்ஹாவுஸன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மிகவும் மதுபோதையில் இருந்த அந்த நபரை மீட்டு, நகரின் மைய காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவசர மருத்துவ குழுவினர் அவருக்கு முதல் மருத்துவ சிகிச்சை வழங்கினர்.

கொள்ளை வழக்காக சந்தேகிக்கப்படுகிறது – பொதுமக்கள் உதவி தேவை

சாஃப்ஹாவுஸன் போலீசார் தற்போது நடத்தியுள்ள ஆரம்ப விசாரணையில், இந்த நபர் ரயில் நிலைய சுற்றுவட்டாரத்தில் ஒரு கொள்ளைச் சம்பவத்துக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வழங்கக்கூடியவர்கள் சாஃப்ஹாவுஸன்  காவல் நிலையத்தின் தொலைபேசிக்கு அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

@Kapo SH

Related Articles

Back to top button