Swiss News In Tamil

டிக்கெட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு 540 பிராங்குகள் வரை அபராதம்

டிக்கெட் இல்லாமல் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கு தண்டப்பணம் அதிகரிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் டிக்கெட் இல்லாமல் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சுவிஸ் ஃபெடரல் ரயில்வே மற்ற போக்குவரத்து நிறுவனங்களுடன் சேர்ந்து, அதிக அபராதம் விதிப்பதன் மூலம் ஏமாற்றுபவர்களை குறிவைக்க விரும்புகிறது.

cq5dam.web .1280.1280

குறிப்பாக மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு இவ்வாறான கடுமையான அபராதங்களை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்போது, ​​முதல் முறை மேற்கொள்ளும் குற்றத்திற்கு 90 பிராங்குகள்இ இரண்டாவது குற்றத்திற்கு 130 பிராங்குகளும் மற்றும் அதற்குப் பிறகு 160 அபராதம் விதிக்கப்படுகிறது.

இருப்பினும், 265 போக்குவரத்து நிறுவனங்களுக்கான ஒரு குடை அமைப்பான சுவிஸ்பாஸ் அலையன்ஸ், நாள்பட்ட குற்றவாளிகளின் அபராதத்தை 540 பிராங்குகளாக அதிகரிக்க முயற்சி மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button