Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மக்களை அச்சுறுத்திய ஓநாய் சுட்டு கொலை!

சுவிட்சர்லாந்தில் மனிதர்களை வேட்டையாட முயற்சித்த ஓநாயை முன் அனுமதியின்றி நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் தென்கிழக்கு மாநிலமான கிராபண்டனில் (Graubünden) ஓநாயின் நடமாட்டம் அதிகரித்ததால், மக்களின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தியது.

இந்த காரணமாக அப்பகுதியதில் ஓநாய்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஓநாயை ரப்பர் தோட்டாக்கள் மூலம் பயமுறுத்தவும், மின்னணு டிரான்ஸ்மிட்டருடன் பொருத்தவும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்து சென்ற ஒரு நபரை அந்த ஓநாய் பின்தொடர்ந்து வந்துள்ளது. கிட்டத்தட்ட அந்த நபரின் இரண்டு மீட்டருக்குள் நெருக்கமாக செல்வதை மக்கள் கண்டுள்ளனர்.

எனவே, பொதுமக்களைப் பாதுகாக்க அவசர நடவடிக்கையாக ஓநாயைச் சுட வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அந்த ஓநாய சுட்டுக்கொல்லப்பட்டது.

சுவிட்சர்லாந்தில்,ஓநாய்,சுட்டு கொலை

ஓநாய்கள் சுவிட்சர்லாந்தில் ஒரு பாதுகாக்கப்பட்ட இனமாகும். கடுமையான நிபந்தனைகளின் கீழ் மட்டுமே அவை அழிக்கப்படும்.

அதற்கும், ஓநாய்கள் ஏன் சுடப்பட வேண்டும் என்பதற்கான காரணங்களைக் கூறி, தனிப்பட்ட மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரிகளிடமிருந்து அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பெரும்பாலும், இந்த ஓநாய்கள் அதிகமான கால்நடைகளை கொல்வதால் அல்லது ஓநாய் கூட்டம் பெரிதாக வளர்வதால் இந்த முடிவு எடுக்கப்படுகிறது.

மேலும், ஓநாய் கூட்டங்கள் மக்களை பாதிக்கும் சாத்தியக்கூறுகள் இருந்தால் கொல்ல அனுமதிக்கப்படுகிறது.

2020-ஆம் ஆண்டில், ஓநாய்களைக் கொல்வதற்கான சட்டத்தை எளிதாக்கும் பாராளுமன்றத்தின் திட்டங்களை வாக்காளர்கள் நிராகரித்து, அத்தகைய முடிவுகளை எடுக்க தனிப்பட்ட மாநிலங்களுக்கு அதிக சுயாட்சியை வழங்கினர்.

சுவிட்சர்லாந்தில் தற்போது சுமார் 130 ஓநாய்கள் மற்றும் குறைந்தது 11 ஓநாய் கூட்டங்கள் உள்ளன. அவை ஆண்டுக்கு 300-500 செம்மறி ஆடுகளைக் கொல்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button