Swiss News In Tamil

சூரிச் அதிவேக வீதியில் மெதுவாக வாகனம் ஓட்டியருக்கு அபராதம்

அதிவேக வீதியில் மெதுவாக வாகனம் ஓட்டியருக்கு அபராதம்

சூரிச் அதிவேக வீதியில் மெதுவாக வாகனம் ஓட்டியருக்கு அபராதம் சூரிச் நகரைச் சேர்ந்த 54 வயது பெண் ஓட்டுநர் ஒருவருக்கு மெதுவாக வாகனத்தை ஓட்டியமைக்காக கடுமையான அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் மார்ச் 10 ஆம் தேதி சூரிச் நோக்கி A3 இல் இடம்பெற்றதாக “20 மினுட்டன்” 20Min – பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஓட்டுனர் முந்திச்செல்லும் பாதையில் மிக மெதுவாக வாகனம் ஓட்டியமைக்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Schwyz மாகாணத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவின்படி, அந்த பெண் மோட்டார் பாதையின் இடது பாதையில் இரண்டு கிலோமீட்டர் தூரம் வேகத்தை அதிகரிக்காமல் அல்லது பாதையை வழிவிடாமல் ஓட்டினார்.

சூரிச் அதிவேக

நெடுஞ்சாலைகளில், இடதுபுறப் பாதை பொதுவாக முந்திச் செல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் மெதுவாக நகரும் வாகனங்கள், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், முந்திச் சென்ற பிறகு, வலதுபுறப் பாதையில் செல்ல வேண்டும்.

54 வயதான ஓட்டுநர் முந்திச் செல்லும் பாதையைத் தடுத்ததாலும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு இணங்க போதுமான வேகத்தில் ஓட்டாததாலும், அவருக்கு அபராதம் நோட்டீஸ் விதிக்கப்பட்டது.

குறித்த பெண்ணிற்கு இப்போது மொத்தம் 420 பிராங்குகள் செலவாகிறது: இதில் 200 பிராங்குகள் அபராதத்திற்காகவும், மேலும் 220 பிராங்குகள் நடைமுறைச் செலவுகளுக்காகவும் கோரப்பட்டுள்ளது.

குறிப்பாக, பின்னால் வேகமாக வரும் வாகனத்திற்கு வழிவிடாமையினாலும். போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் தேவையற்ற போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்தியதற்காகவும் குற்றம் சுமத்தப்பட்டு குறித்த பெண்ணிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button