Swiss News In Tamil

காசாவில் வன்முறைகளை நிறுத்துமாறு சுவிட்சர்லாந்து வலியுறுத்தல்

காசாவில் வன்முறைகளை நிறுத்துமாறு சுவிட்சர்லாந்து வலியுறுத்தல்

காசாவில் வன்முறைகள் உடன் நிறுத்தப்பட வேண்டுமென சுவிட்சர்லாந்து அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

காசா நகர மையத்தில் நடைபெறும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரிப்பது ஏற்கனவே தாங்க முடியாத மனிதாபிமான நிலைமையை மேலும் மோசமாக்குகிறது என சுவிட்சர்லாந்து வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.

“வன்முறை அதிகரிப்பது எந்தத் தீர்வும் அல்ல,” என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உடனடி போர்நிறுத்தம், அனைத்து பணயக் விடுதலை, மனிதாபிமான உதவிக்கு தடையற்ற அணுகல், சர்வதேச சட்டங்களுக்கு இணக்கம் மற்றும் நம்பகமான இரு-நாடு தீர்வுக்கான பாதை என்பனவற்றை சுவிட்சர்லாந்து கோரியுள்ளது.

இந்த அறிக்கை, இஸ்ரேல் காசா நகரில் பாரியளவு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியதைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button