Swiss News In Tamil
சென்ட் காலனில் கனமழை – பாதான அறைகளில் வெள்ளம்
சென்ட் காலனில் நேற்று வியாழன் மாலை பெய்த கனமழைக்குப் பிறகு பல பாதாள அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது.
சென்ட்காலன் கன்டோன் நகர காவல்துறையின் அறிக்கையின்படி 31 தீயணைப்புத் துறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

நகரின் மையப்பகுதியே பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் எனினும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் முதல் சுவிட்சர்லாந்தில் பல்வேறு கன்டோன்களிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.





