டெசினோவில் கனமழைக்குப் பிறகு வெள்ள அபாய எச்சரிக்கை.!!
டெசினோவில் கனமழைக்குப் பிறகு, லாங்கன் ஏரியின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளதாக காலநிலை அவதான மையம் அறிவித்துள்ளது. சனிக்கிழமை மாலை முதல் இருபது சென்டிமீட்டருக்கும் அதிகமாக நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமையன்று மிதமான வெள்ள அபாயம் ஏற்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வு கூறியுள்ளது. லுகானோ ஏரியிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரு ஏரிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெசினோ போன்ற ஆல்ப்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மற்ற ஆறுகளின் வெளியேற்றத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். திங்கட்கிழமை அதிகாலையில் நீர்வரத்து உச்சம் ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளிக்கிழமை காலை மழைப்பொழிவு தொடங்கியதில் இருந்து, 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழையும், உள்நாட்டில் 100 முதல் 120 மில்லிமீட்டர் மழையும் லுகார்ன்னோ, கோதார்ட் மற்றும் லெவென்டினா பகுதிகளில் பெய்துள்ளது.
வெள்ள அபாயம் கடுமையான காற்று போன்ற இயற்கை காரணங்களால் டெசினோ மாகாணம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் சில வீதிகள் மூடப்படுவதோடு கேபிள் கார் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





