கோத்தார்ட் சுரங்கப்பாதை 18 இரவுகள் மூடல்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு
கோத்தார்ட் சுரங்கப்பாதை 18 இரவுகள் மூடல்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கோத்தார்ட் சுரங்கப்பாதை 18 இரவுகள் மூடல்! பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…
கோத்தார்ட் சாலை சுரங்கப்பாதையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை, கோத்தார்ட் சாலை சுரங்கப்பாதையில் இரவு நேர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, மொத்தம் 18 இரவுகளுக்கு, இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை சுரங்கப்பாதை முழுமையாக மூடப்படும்.
இந்த காலகட்டத்தில் போக்குவரத்து கோத்தார்ட் கணவாய் சாலை வழியாக மாற்றி விடப்படும் என்று யூரி மாகாண சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 3.5 டன்களுக்கு மேல் எடையுள்ள கனரக சரக்கு வாகனங்களுக்கு இரவு நேரத்தில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இந்த கனரக வாகனங்கள் இரவு 7.30 மணி முதல், வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரு திசைகளிலும் நிறுத்தப்படும்.
மூடல் தொடர்ச்சியாக நடைபெறாது. செப்டம்பர் 7 முதல் 11 வரை, செப்டம்பர் 14 முதல் 18 வரை, செப்டம்பர் 21 முதல் 25 வரை, செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை, மேலும் அக்டோபர் 5 முதல் 7 வரை இரவு நேரங்களில் சுரங்கப்பாதை மூடப்படும்.
எனவே, அந்த நேரங்களில் கோத்தார்ட் வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் கூடுதல் பயண நேரத்தைக் கணக்கில் கொண்டு, மாற்றுப்பாதை மற்றும் போக்குவரத்து நிலவரத்தை முன்கூட்டியே சரிபார்ப்பது முக்கியம்.
கோத்தார்ட் வழியாக இரவு நேரப் பயணம் செய்பவர்கள் இந்த தகவலை தவறாமல் கவனத்தில் கொள்ளுங்கள்!





