முஸ்லிம் மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடா? சூரிச் சபையில் கடும் விவாதம்
முஸ்லிம் மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடா? சூரிச் சபையில் கடும் விவாதம்

முஸ்லிம் மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடா? சூரிச் சபையில் கடும் விவாதம்…
சூரிச் மாகாணத்தில் பள்ளிகளில் தலைமுக்காடு அணிவது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள புதிய அரசியல் முடிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் மாகாண நாடாளுமன்றம், அரசுப் பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகளில் சிறுமிகள் மற்றும் பெண்கள் தலைமுக்காடு அணிவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை திங்கள்கிழமை நிறைவேற்றியுள்ளது.
இந்தத் தீர்மானம் 87க்கு 82 வாக்குகள் என்ற மிகக் குறுகிய வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் 6 பேர் வாக்களிக்கவில்லை.
சுவிஸ் மக்கள் கட்சியான SVP, இந்த நடவடிக்கை பள்ளிகளில் சமத்துவத்தையும் சுதந்திரமான வளர்ச்சியையும் பாதுகாக்கும் என்று வாதிட்டுள்ளது.
ஆனால் இடதுசாரி கட்சிகளும் சென்டர் கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மதச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு இந்தத் தடை முரணாக இருக்கலாம் என்று எதிர்க்கட்சியினர் எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில், தலைமுக்காடு அணியும் முஸ்லிம் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதேவேளை, சூரிச் மாகாண அரசு இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சட்ட முன்மொழிவைத் தயாரிக்க வேண்டும்.
அதற்காக அரசுக்கு தற்போது இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சட்டம் உண்மையில் நடைமுறைக்கு வருமா? அல்லது அரசியலமைப்பு மற்றும் மதச் சுதந்திரம் தொடர்பான சட்டச் சவால்களை எதிர்கொள்ளுமா?
சூரிச் மாகாணத்தின் அடுத்த நடவடிக்கைகள் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.





