Local Swiss News

ரயில் நிலையத்தில் திடீர் சண்டை! 19 வயது இளைஞர் படுகாயம் – மர்ம நபருக்கு போலீஸ் வலை!

ரயில் நிலையத்தில் திடீர் சண்டை! 19 வயது இளைஞர் படுகாயம் – மர்ம நபருக்கு போலீஸ் வலை!

ரயில் நிலையத்தில் திடீர் சண்டை! 19 வயது இளைஞர் படுகாயம் – மர்ம நபருக்கு போலீஸ் வலை!

சுவிட்சர்லாந்தின் ஆராவ் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை மாலை, ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென சண்டையாக மாறியதில், 19 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆர்காவ் மாகாண காவல்துறைக்கு மாலை சுமார் 6:20 மணியளவில் ரயில் நிலையத்தில் சண்டை நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

சில நிமிடங்களிலேயே முதல் காவல்துறை ரோந்து குழு சம்பவ இடத்தை சென்றடைந்தது.

மைக்ரோலினோ கடைக்கு அருகிலுள்ள படிக்கட்டுப் பகுதியில், பல இளைஞர்கள் இருப்பதை காவல்துறையினர் கண்டனர்.

அங்கு 19 வயதான ஆப்கானிய இளைஞர் ஒருவர் பல கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திலேயே அவருக்கு முதலுதவி வழங்கிய பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

9a 6

எனினும், காவல்துறை வருவதற்கு முன்பே சந்தேகிக்கப்படும் தாக்குதலாளர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடியுள்ளார்.

தற்போது ஆர்காவ் மாகாண காவல்துறை தீவிர விசாரணையை முன்னெடுத்து வருவதுடன், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளையும் தேடி வருகிறது.

இந்த நிலையில், அரசு வழக்கறிஞர் அலுவலகமும் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.

தப்பியோடிய சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் கிடைத்தால், காவல்துறையிடம் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button