Swiss News In Tamil

மத்திய ஆப்பிரிக்காவில் சுவிஸ் நாட்டவர் சுட்டுக்கொலை! தாக்குதலில் 2 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்காவில் சுவிஸ் நாட்டவர் சுட்டுக்கொலை! தாக்குதலில் 2 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்காவில் சுவிஸ் நாட்டவர் சுட்டுக்கொலை! தாக்குதலில் 2 பேர் பலி!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் சுவிஸ் நாட்டுக் குடிமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார்!

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பாங்குய் நகருக்கு வடக்கே, வியாழக்கிழமை இந்த அதிர்ச்சித் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் சுவிஸ் நாட்டவர் ஒருவரும், அவருடன் பாதுகாப்புக்குச் சென்ற மத்திய ஆப்பிரிக்க ராணுவ வீரர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க ராணுவ வட்டாரங்களின் தகவல்படி, அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய கொள்ளையர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்த சுவிஸ் குடிமகன், அப்பகுதியில் கனிமப் படிவுகளைத் தேடும் பணிக்காக, அதாவது கனிம ஆய்வுக்காகச் சென்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4A 8

அவரது பாதுகாப்புக்காக உடன் சென்ற ராணுவ துணை அதிகாரியும் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தலைநகர் பாங்குயிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் வடக்கே உள்ள டமாரா நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

இருவரின் உடல்களும் தலைநகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், தாக்குதலின் பின்னணி மற்றும் குற்றவாளிகளை கண்டறிவதற்காக மத்திய ஆப்பிரிக்க நீதித்துறை விசாரணையை ஆரம்பிக்கவுள்ளது.

வைரம் மற்றும் தங்கம் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகமாகக் காணப்படும் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில், பல ஆண்டுகளாக ஏற்பட்ட உள்நாட்டு மோதல்களுக்குப் பின்னரும் பாதுகாப்பு நிலைமை இன்னும் நிலையற்றதாகவே உள்ளது.

சுவிஸ் நாட்டவரின் மரணம் தொடர்பான விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button