Swiss News In Tamil

205 மில்லியன் பிராங்க் திருப்பிச் செலுத்திய போஸ்ட்பஸ்! 2027-ல் மீண்டும் விசாரணை!

205 மில்லியன் பிராங்க் திருப்பிச் செலுத்திய போஸ்ட்பஸ்! 2027-ல் மீண்டும் விசாரணை!

205 மில்லியன் பிராங்க் திருப்பிச் செலுத்திய போஸ்ட்பஸ்! 2027-ல் மீண்டும் விசாரணை!

சுவிட்சர்லாந்தை உலுக்கிய போஸ்ட்பஸ் மானிய ஊழல் வழக்கின் விசாரணை, 2027ஆம் ஆண்டு மீண்டும் நீதிமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ளது!

சுவிஸ் தபால் நிறுவனமான Swiss Post-இன் முன்னாள் நிர்வாகிகள் ஏழு பேர், சட்டவிரோதமாக மானியங்களைப் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பெர்ன் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

இவர்களில் போஸ்ட்பஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர், Swiss Post நிறுவனத்தின் முன்னாள் நிதித் தலைவர் மற்றும் நிர்வாகக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய முன்னாள் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஃபெட்போல் பிறப்பித்த தண்டனை உத்தரவுகளை குற்றம் சாட்டப்பட்டவர்கள் எதிர்த்து முறையிட்டதைத் தொடர்ந்து, இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு சென்றுள்ளது.

ஆனால், விசாரணைக்கான குறிப்பிட்ட தேதி இதுவரை நிர்ணயிக்கப்படவில்லை என பெர்ன் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடு 2018ஆம் ஆண்டு அம்பலமானதைத் தொடர்ந்து, Swiss Post நிறுவனம் கூட்டாட்சி அரசு, மாகாணங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு 205 மில்லியன் சுவிஸ் பிராங்குகளைத் திருப்பிச் செலுத்தியது!

4A 5

பல ஆண்டுகளாக கணக்கியல் முறைகேடுகள் மூலம் லாபத்தை மறைத்து, மில்லியன் கணக்கான பிராங்க் மானியங்களை தவறாகப் பெற்றதாக முன்னாள் நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இந்த வழக்கில் யார் பொறுப்பேற்க வேண்டும்? இழப்பீடு தொடர்பான கேள்விகளுக்கு என்ன தீர்வு கிடைக்கும்?

2027ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணை தொடங்கியதும், இந்த விவகாரம் மீண்டும் சுவிட்சர்லாந்தில் பெரும் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button