திரிம்பாக் ஸ்ரீ அம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேர் திருவிழா
திரிம்பாக் ஸ்ரீ அம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேர் திருவிழா

திரிம்பாக் ஸ்ரீ அம்மன் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேர் திருவிழா..
Sri Manonmani Amman ஆலயத்தின் வருடாந்திர மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று பக்தி பரவசத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை முதலே சுவிட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து அம்மனை தரிசித்தனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையைத் தொடர்ந்து, மலர்களாலும் வண்ண அலங்காரங்களாலும் அழகுபடுத்தப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ அம்மன் எழுந்தருளினார்.

பின்னர், பக்தர்கள் “ஓம் சக்தி! பராசக்தி!” என்ற பக்தி முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். ஆலயத்தைச் சுற்றியுள்ள வீதிகள் முழுவதும் பக்தர்களின் பெருந்திரளால் நிரம்பியிருந்ததுடன், ஆன்மிக உற்சாகம் மற்றும் பக்தி உணர்வு எங்கும் காணப்பட்டது.
தேர் திருவிழாவில் பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டின் தேர் திருவிழா, இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்களின் பெரும் பங்கேற்புடன் நடைபெற்றதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
“ஓம் சக்தி! பராசக்தி!” என்ற பக்தி முழக்கங்களால் திரிம்பாக் நகரமே ஆன்மிகச் சூழலில் மூழ்கியிருந்தது.





