முக்கிய இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள்… சுவிட்சர்லாந்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!
முக்கிய இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள்... சுவிட்சர்லாந்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!

முக்கிய இராணுவ தளத்தின் மீது மர்ம ட்ரோன்கள்… சுவிட்சர்லாந்து பாதுகாப்புக்கு புதிய அச்சுறுத்தல்!
சுவிட்சர்லாந்தின் முக்கியமான இராணுவ மற்றும் தேசிய பாதுகாப்பு தளத்தின் மீது அடையாளம் தெரியாத ட்ரோன்கள் மீண்டும் பறந்த சம்பவம், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன, அவற்றின் நோக்கம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இதையடுத்து, சுவிஸ் இராணுவம் உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது. ட்ரோன்கள் தென்படும் சம்பவங்களை முறையாகப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட தளத்தைச் சுற்றி பறக்கத் தடை மண்டலத்தை உருவாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தற்போது பரிசீலனையில் உள்ளன.
இந்தச் சம்பவம் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நேட்டோ பாதுகாப்பு வல்லுநர்கள், சுவிட்சர்லாந்து ஒரு முக்கிய திருப்புமுனையில் இருப்பதாகவும், ட்ரோன் அச்சுறுத்தலை இனியும் அலட்சியப்படுத்த முடியாது என்றும் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, சுவிஸ் இராணுவத் தளபதி, பழைய பாதுகாப்பு சிந்தனைகள் இன்றைய ட்ரோன் யுகத்திற்கு பொருந்தாது என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். முக்கிய உள்கட்டமைப்புகளை பாதுகாக்கும் திட்டங்களில் ட்ரோன் தாக்குதல் அபாயம் இதுவரை போதுமான அளவில் சேர்க்கப்படவில்லை என்பதும் கவலையை அதிகரித்துள்ளது.
மறுபுறம், F-35 போர் விமானங்கள் மற்றும் Patriot வான் பாதுகாப்பு அமைப்புகளுக்காக பல பில்லியன் சுவிஸ் பிராங்குகள் செலவிடப்பட்டாலும், குறைந்த செலவில் செயல்படும் ட்ரோன்களுக்கு எதிராக அவை முழுமையான தீர்வாக அமையவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.
உலகத் தரத்தில் ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்தபோதிலும், கடுமையான ஏற்றுமதி விதிமுறைகள் காரணமாக அந்தத் தொழில்நுட்ப முன்னிலை பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் வலுத்து வருகிறது.





