Swiss News In Tamil

நெடுஞ்சாலையில் பன்றியால் பதறிய ஓட்டுனர்கள் : கிரௌவுன்டன் கன்டோனில் சுவாரசிய சம்பவம்

நெடுஞ்சாலையில் பன்றியால் பதறிய ஓட்டுனர்கள் : கிரௌவுன்டன் கன்டோனில் சுவாரசிய சம்பவம்

சுவிட்சர்லாந்தின் கிரௌவுண்டன் கன்டோனில் உள்ள கோய்ரா நகரம் அருகே இன்று காலை ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. A13 நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒரு வாகனத்தின் பின்னால் இணைக்கப்பட்டிருந்த ரிமோர்கிலிருந்து ஒரு பன்றி திடீரென தப்பிச் சென்று நெடுஞ்சாலையில் ஓடியதால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

இன்று காலை 10 மணிக்கு சற்றுமுன், “கோய்ராவில் நெடுஞ்சாலையில் ஒரு பன்றி ஓடிக்கொண்டிருக்கிறது” என்று காவல் துறைக்கு தகவல் கிடைத்ததாக கன்டோனல் போலீஸ் தெரிவித்துள்ளது. இந்த தகவலை அவர்கள் தங்களது பேஸ்புக் பதிவிலும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

N1 8

போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, சிறிது நேரம் சிரமத்துடன் அந்தப் பன்றியை பிடித்தனர். மீட்பு நடவடிக்கையின் போது சுமார் 20 நிமிடங்கள் A13 நெடுஞ்சாலை மூடப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு தற்காலிக இடையூறு ஏற்பட்டது.

நல்ல விஷயம் என்னவென்றால், இந்த சம்பவத்தில் அந்தப் பன்றிக்கு எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பின்னர் அது மீண்டும் பாதுகாப்பாக அதனை கொண்டு சென்ற ரிமோர்கில் ஏற்றப்பட்டது. சுவிட்சர்லாந்தில் அரிதாகவே நடைபெறும் இத்தகைய சம்பவங்கள், நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் எவ்வளவு முக்கியம் என்பதைக் கூடுதல் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

Related Articles

Back to top button