பேர்னில் உள்ள ஒரு தம்பதியினர் அதிகாரிகளிடம் சுமார் 16 மில்லியன் CHF மோசடி செய்த குற்றத்திற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளனர். வணிக குற்றவியல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை தொடங்கியது. சொகுசு கார்கள், விலையுயர்ந்த ஒயின்கள், (coats) கோட்டுகள், கோல்ஃப் உபகரணங்கள் மற்றும் ஆடம்பர கைப்பைகள் உட்பட மில்லியன் கணக்கான சொத்துக்களை மறைத்து வைத்து வறுமையில் வாழ்வது போல் நடித்ததாக தம்பதி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையின்படி, அவர்களது வங்கிக் கணக்குகளில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான CHF இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் 75 வயது ஆணும் 61 வயது பெண்ணும் ஆவர். அவர்களின் சொத்துக்கள் தொடர்பான மோசடி தவிர, அவர்கள் சட்டவிரோதமாக சமூக உதவி மற்றும் பிற சலுகைகளைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கடன் சான்றிதழ்களை மிகக் குறைந்த விலையில் திரும்ப வாங்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும் இருவரும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார்கள். மேலும் சுவிஸ் சட்டத்தின் கீழ், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்கள் நிரபராதிகளாகக் கருதப்படுவார்கள். நீதிமன்றம் வியாழன் அன்று தீர்ப்பை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (c) SDA- Keystone