Local Swiss News

காரை கவனிக்கத் தவறிய லாரி ஓட்டுநர்? பெண் படுகாயம்… நடந்தது என்ன?

காரை கவனிக்கத் தவறிய லாரி ஓட்டுநர்? பெண் படுகாயம்… நடந்தது என்ன?

காரை கவனிக்கத் தவறிய லாரி ஓட்டுநர்? பெண் படுகாயம்… நடந்தது என்ன?

சுவிட்சர்லாந்தின் ஸுக் மாகாணம், ஹுனென்பெர்க் பகுதியில் உள்ள A4 நெடுஞ்சாலையில் திங்கட்கிழமை பிற்பகல் பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாலை 4 மணிக்குப் பிறகு, 46 வயதான லாரி ஓட்டுநர் பாதையை மாற்றியபோது, அருகில் சென்ற காரை கவனிக்கத் தவறியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாரி காருடன் மோதியதைத் தொடர்ந்து, இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து சுழன்றன.

அப்போது நடந்தது தான் மிகப்பெரிய அதிர்ச்சி!

லாரி, காரின் மீது கவிழ்ந்து, காரை முழுமையாக நசுக்கியது.

காருக்குள் சிக்கியிருந்த 25 வயது பெண் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

அவரை மீட்பது மிகவும் சிக்கலானதாக இருந்தது.

முதலில் கிரேன் உதவியுடன் லாரியில் இருந்த பொருட்கள் அகற்றப்பட்டு, பின்னர் லாரி தூக்கப்பட்டது.

3887864227107649

அதன் பிறகே காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணை மீட்க முடிந்தது.

அவர் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மாகாணத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

லாரி ஓட்டுநரும் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்தால் சூரிச் நோக்கிச் செல்லும் A4 நெடுஞ்சாலை சுமார் 6 மணி நேரம் மூடப்பட்டது.

ஒரு சிறிய கவனக்குறைவு… ஒரு குடும்பத்தின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதை இந்த விபத்து மீண்டும் நினைவூட்டுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button