Swiss News In Tamil

விமான நிலைய எல்லைச் சோதனைகளை தற்காலிகமாக தளர்த்த சுவிட்சர்லாந்து கோரிக்கை

விமான நிலைய எல்லைச் சோதனைகளை தற்காலிகமாக தளர்த்த சுவிட்சர்லாந்து கோரிக்கை

விமான நிலைய எல்லைச் சோதனைகளை தற்காலிகமாக தளர்த்த சுவிட்சர்லாந்து கோரிக்கை

சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்திடம் (EU) விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் எல்லைக் கட்டுப்பாடுகளை தற்காலிகமாக தளர்த்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை சுவிட்சராந்து மட்டும் அல்லாமல் மேலும் எட்டு ஐரோப்பிய நாடுகளும் இணைந்து ஐரோப்பிய ஆணையத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தின் மூலம் வலியுறுத்தியுள்ளன.

கோடை விடுமுறை பயணங்கள் அதிகரிக்கும் இந்த காலத்தில், விமான நிலையங்களில் நீண்ட நேரக் காத்திருப்பை தவிர்க்கும் நோக்கில், புதிய Entry/Exit System (EES) நடைமுறையை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டும் என்பதே இந்த நாடுகளின் முக்கிய கோரிக்கையாகும்.

n1 1

ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தவுள்ள Entry/Exit System என்பது, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்ததல்லாத நாடுகளிலிருந்து வரும் பயணிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் தகவல்களை மின்னணு முறையில் பதிவு செய்யும் புதிய எல்லை மேலாண்மை அமைப்பாகும். இந்த அமைப்பு பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஆரம்பகட்ட அமலாக்கத்தில் பயணிகளின் செயல்முறை நேரம் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

சுவிட்சர்லாந்தின் மாநில குடியேற்றச் செயலகம் (SEM) தெரிவித்ததாவது, பயணிகள் அதிகமாக இருக்கும் உச்சகட்ட காலங்களில் ஒவ்வொரு பயணியையும் செயல்படுத்த கூடுதல் நேரம் தேவைப்படுவதால், சில விமான நிலையங்களில் உள்கட்டமைப்பு மீது தற்காலிக அழுத்தம் ஏற்படலாம். இதன் விளைவாக, பயணிகள் இரண்டு மணி நேரம் வரை எல்லைச் சோதனைகளுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், கோடை பயண நெரிசல் குறையும் வரை Entry/Exit System நடைமுறையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அல்லது தளர்வுடன் அமல்படுத்த வேண்டும் என்று சுவிட்சராந்து வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பயணிகளின் சிரமத்தை குறைப்பதோடு, விமான நிலையங்களின் செயல்திறனையும் பாதுகாக்க உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button