AI காலநிலை நெருக்கடியை வேகப்படுத்துகிறது’ – சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் எதிர்ப்பு!
AI காலநிலை நெருக்கடியை வேகப்படுத்துகிறது' – சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் எதிர்ப்பு!

AI காலநிலை நெருக்கடியை வேகப்படுத்துகிறது’ – சுவிட்சர்லாந்தில் தீவிரமடையும் எதிர்ப்பு!
சுவிட்சர்லாந்தின் ஷாஃப்ஹவுசன் மாகாணத்தில் அமைக்கப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு, அதாவது AI தரவு மையத்திற்கு எதிரான போராட்டம் புதிய கட்டத்தை எட்டியுள்ளது.
பெரிங்கன் அருகே நடைபெற்ற போராட்ட முகாமை காவல்துறையினர் அகற்றிய ஒரு நாளிலேயே, ஆர்வலர்கள் சுவிஸ் எல்லையைத் தாண்டி ஜெர்மனியின் டெங்கன் பகுதியில் புதிய முகாமை அமைத்துள்ளனர்.
“AI ஷார்ட்-சர்க்யூட் முகாம்” என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர்கள், காவல்துறை நடவடிக்கைகள் தங்களின் இயக்கத்தை நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பெரிங்கனில் கட்டப்பட்டு வரும் மிகப்பெரிய தரவு மையம், சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்காக உருவாக்கப்படுவதாகவும், இதனால் ஷாஃப்ஹவுசன் பகுதி படிப்படியாக மிகப்பெரிய தரவு மைய மண்டலமாக மாறி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்குத் தேவையான தரவு மையங்கள் மிகப்பெரிய அளவில் மின்சாரம், தண்ணீர் மற்றும் பிற வளங்களை பயன்படுத்துவதால், அவை காலநிலை நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றன என்றும் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதற்கிடையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் சர்வதேச அளவில் செயல்படுகின்றன என்றால், அதற்கு எதிரான போராட்டமும் சர்வதேச அளவில் தொடரும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து அனைவரின் கவனமும் தற்போது திரும்பியுள்ளது.





