ஐந்து தலைமுறைகளாக இயங்கிய நிறுவனம் சிக்கலில்… ஷீசரின் Schiesserஎதிர்காலம் கேள்விக்குறி!
ஐந்து தலைமுறைகளாக இயங்கிய நிறுவனம் சிக்கலில்... ஷீசரின் Schiesserஎதிர்காலம் கேள்விக்குறி!

ஐந்து தலைமுறைகளாக இயங்கிய நிறுவனம் சிக்கலில்… ஷீசரின் Schiesserஎதிர்காலம் கேள்விக்குறி!
சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட புகழ்பெற்ற ஷீசர் மிட்டாய் நிறுவனம், தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அந்நிறுவனத்திற்கு எதிராக ஆரம்பகட்ட திவால் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மாகாண அரசிதழில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பேசல் சந்தைச் சதுக்கத்தில் நடைபெற்று வரும் பெரிய கட்டுமானப் பணிகள் காரணமாக, கடந்த திங்கட்கிழமை முதல் மிட்டாய் கடையும், அதனுடன் இணைந்த தேநீர் அறையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
நுழைவாயிலில் ஒட்டப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த மூடல் சுமார் ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை நீடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திவால் நடைமுறையின் இறுதி வடிவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. எனவே, நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து அதிகாரப்பூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்டீஃபன் ஷீசர், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் காலமானார். அதன்பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக பொறுப்பை ஏற்றிருந்த ஜோக்கன் மௌராஷர், நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
1870-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷீசர் நிறுவனம், ஐந்து தலைமுறைகளாக ஒரே குடும்பத்தினரால் நடத்தப்பட்டு வந்த சுவிஸ் பாரம்பரிய மிட்டாய் நிறுவனமாகும். பேசலின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம், பேக்கரி மற்றும் சாக்லேட் தயாரிப்புகளுக்காக உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயரைப் பெற்றிருந்தது.
இந்த பாரம்பரிய நிறுவனத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி தற்போது பேசல் மக்களிடையிலும், சுவிஸ் வணிக உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.





