இஸ்ரேல்-சுவிட்சர்லாந்து கூடைப்பந்து போட்டிக்கு எதிராக சுவிசில் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல்-சுவிட்சர்லாந்து கூடைப்பந்து போட்டிக்கு எதிராக சுவிசில் ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் அணி பங்கேற்றுள்ள U19 கூடைப்பந்து உலகக் கோப்பையை எதிர்த்து, சனிக்கிழமை மாலை 6:30 மணி அளவில் பல போராட்டக்காரர்கள் வாட் அரீனா (Vaud Arena) முன் திரண்டனர்.
போட்டி ஆரம்பிக்க நேரம் நெருங்கியவுடன், அவர்கள் பாதுகாப்புப் பகுதிகளை அடையாளமாக அமைத்திருந்த கட்டைகளை தள்ளத் தொடங்கினர். அந்த இடத்தில் கலவரத்தடுப்பு உடையில் காவல்துறையினர் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
பல முறை தடைகளை உடைக்க முயற்சி செய்த போராட்டக்காரர்கள் மீது, போலீசார் கண்ணீர் புகை மற்றும் PepperSpray பயன்படுத்தி பின்வாங்கவைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தின்போது, “லௌசானில் இனவழிப்பு வேண்டாம்!” என முழக்கமிட்டனர். அரீனாவுக்குள் செல்லும் போட்டிப் பார்வையாளர்களிடம் எதிர்ப்புடன் கூடிய வார்த்தைகளையும் விமர்சனங்களையும் நம்பிக்கையுடன் கூறினர்.

இந்த போராட்டத்துக்கு முன்பே பல மனித உரிமை மற்றும் சமுதாய அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன. இஸ்ரேல் அணியை U19 உலகக் கோப்பையிலிருந்து மட்டும் அல்லாமல், அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலிருந்தும் நீக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இஸ்ரேலின் அடுத்த போட்டி, ஞாயிற்றுக்கிழமை ஜோர்டானுடன் நடைபெறவிருக்கிறது.
இதேநேரத்தில், பேர்ன் பல்கலைக்கழகம் (University of Bern) இஸ்ரேல் – பாலஸ்தீன் தொடர்பான Amnesty International அமைப்பின் பேச்சுவார்த்தை நிகழ்ச்சியை நிறுத்தி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பல மாணவர்களிடையே எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
@Keystone-SDA





