Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று

சுவிட்சர்லாந்தில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று

சுவிட்சர்லாந்தில் ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்று எண்ணிக்கை அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளது.

ஜூலை 8 முதல் 14 ஆம் திகதி வரையிலான வாரத்தில், 484 புதிய கோவிட்-19  தொற்றாளர்கள்  பதிவாகியுள்ளனர்.

இருப்பினும், கோவிட்-19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என, சுவிஸ் பொது சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில்

கடந்த நான்கு வாரங்களில் சுமார் 50 சதவீதம் நோய்த்தொற்றுகள் அதிகரித்ததற்கு, முந்தைய நோய்த்தொற்றுகள் மூலம் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி சுவிஸ் குடியிருப்பாளர்களிடையே படிப்படியாக குறைந்து வருவதே காரணம் என்று, பொது சுகாதார அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் மிங் தெரிவித்தார்.

அதேவேளை, புதிய வைரஸ் வகைகளான KP.2 மற்றும் KP.3 புதிய பிறழ்வுகளைக் கொண்டுள்ளன, அவை ஏற்கனவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை சிறப்பாகத் தவிர்க்க உதவுகின்றன.

இருப்பினும், கொரோனா வைரஸின் முந்தைய ஓமிக்ரோன் திரிபுகளை விட புதிய திரிபுகள் நோயின் கடுமையான போக்கைக் காட்டவில்லை.

மூலம் – Theswisstimes

Related Articles

Back to top button