சுவிட்சர்லாந்தில் சுனாமியா..? ஆராய்ச்சியளர்களை குழப்பும் எலும்புக்கூடுகள்
சுவிட்சர்லாந்தில் சுனாமியா..? ஆராய்ச்சியளர்களை குழப்பும் எலும்புக்கூடுகள்
சுவிட்சர்லாந்தில் சுனாமியா..? ஆராய்ச்சியளர்களை குழப்பும் எலும்புக்கூடுகள் சுவிசில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ஆண்டுகள் பழமையான செல்டிக் எலும்புக்கூடுகளின், புதிய பகுப்பாய்வு முடிவில், அவர்களின் இறப்புக்கு சுனாமியே காரணமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், செல்ட்ஸ் சடங்கு முறையில் அவர்கள் 20 பேரும் தூக்கிலிடப்பட்டதற்கான சாத்தியத்தையும், ஆராய்ச்சியாளர்களால் நிராகரிக்க முடியவில்லை.
1965 ஆம் ஆண்டில் Cornaux NE இல் Zihl கால்வாயில், இடிந்து விழுந்த மரப்பாலம் மற்றும் 20 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன் பின்னர், இவர்கள் எவ்வாறு இறந்தனர் என்பது குறித்து நிபுணர்களிடையே குழப்பம் நீடித்து வருகிறது.
திடீர் வெள்ளம் அல்லது சுனாமியால், பாலம் இடிந்து விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்ற ஒரு கருத்து உள்ளது.
மனிதர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மற்றொரு கருத்தும் நிலவுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக இளைஞர்கள் என்பதால், அவர்கள் தியாகம் செய்த கைதிகள் அல்லது அடிமைகளின் குழுவாக இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும், இறந்த பிறகு உடல்கள் விரைவாக வண்டலின் கீழ் புதையுண்டுள்ளது. சுனாமியின் போது இப்படித்தான் நடந்திருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, எல்லா மரணங்களும் ஒரே நேரத்தில் நிகழவில்லை. எனவே இரண்டு கோட்பாடுகளும் உண்மையாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Source:- Swissinfo





