சூரிச்சில் ஆரம்பபள்ளி ஆசிரியரின் காமவெறி : அம்பலமான உண்மைகள்.!!
சூரிச்சில் ஆரம்பபள்ளி ஆசிரியரின் காமவெறி : அம்பலமான உண்மைகள்.!!
சூரிச்சில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் எல்லை தாண்டிய நடத்தை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. தற்போது அவர் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்கப்பட்டு தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுவான்சிக் மினுட்டன் இணையத்தளம் வெளியிட்ட செய்தியில் அடிப்படையில் மேலும் தெரிவருவதாவது,
சூரிச்சில் உள்ள ஒரு பள்ளியில், ஆசிரியர் ஒருவரால் எல்லை தாண்டிய நடத்தை பற்றிய தகவலை ஒரு பணியாளரிடமிருந்து பள்ளி நிர்வாகம் பெற்றது. சூரிச் நகரம் செவ்வாய்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை அறிவித்துள்ளது.

பள்ளி நிர்வாகமும் மாவட்ட பள்ளி அதிகாரிகளும் உடனடியாக நகரக் காவல் துறையின் குழந்தைகள் பாதுகாப்புத் துறையை அழைத்து, சூரிச் மாகாணத்தின் தொடக்கப் பள்ளி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
கோரிக்கையின் பேரில் சூரிச் அரசு வழக்கறிஞர் அலுவலகம், பாலியல் குற்றங்களில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடங்கியதாக அறிவித்தது.
‘ஆசிரியர் தற்போது தற்காலிக போலீஸ் காவலில் உள்ளார். அரசு வழக்கறிஞர் அலுவலகம் இப்போது மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ளது. விசாரணைகள் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதால் அவரின் பாலியல் நடவடிக்கைளால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது இன்றும் தெளிவாகத் தெரியவில்லை.

எனினும் ப்ளிக் பத்திரிகை வெளியிட்ட அறிக்கையின் படி, பள்ளியில் கடமையில் ஈடுபடும் ஊழியர் ஒருவர் குறித்த ஆசரியர் தனது ஆரம்பபள்ளி மாணவர்களுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுவதை நேரில் பார்த்ததாக குறிப்பிடுகிறார்.
இதன் பின்னரே இந்தவிடயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜூன் 11 செவ்வாய் அன்று இடம்பெற்றிருந்தது. எனினும் இதுகுறித்து விசாரணை செய்ய பள்ளி நிர்வாகம் கால அவகாசம் தேவை என குறிப்பிட்டிருந்தது. தற்போது இவ்விடயம் அம்பலமாகியுள்ளது. பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குறித்த ஆசிரியர் 27 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரின் எல்லை தாண்டிய இந்த செயற்பாடுகளுக்கு பின்னர் பள்ளி நிர்வாகத்தினரால் அங்கு கல்வி கற்கும் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இது தொடர்பாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






