Swiss News In Tamil

சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம்

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) turned 50 with a major uprising in Switzerland.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மேமாதத்தில் இருபெரும் வரலாற்று நிகழ்வுகளாக அமையப்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அகவை 50 மற்றும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அகவை 50 போன்ற நிகழ்வுகளானது ‘மண்டியிடா வீரமும் வீறுகொண்ட எழுச்சியும்” என்னும் கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது. 10.05.2026 ஞாயிறு அன்று பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற இப்ரேழுச்சியில் அரங்கம் நிறைந்த திரளான சுவிஸ் வாழ் தமிழ் உறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்ட இப் பேரெழுச்சி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டது. தொடர்ந்து தமிழீழத் தேசிய மாவீரர்களின் பொதுக்குறியீட்டு திருவுருவப்படத்திற்கான ஈகைச்சுடரேற்றலுடன் மலர்மாலை அணிவிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழீழ நிர்வாகக் கட்டமைப்புக்;களைத் தாங்கிய ஐம்பதிற்கும் மேற்பட்ட இளம்தலைமுறையினர், நுழைவாயிலிருந்து அழைத்து வரும்போது இருமருங்கிலும் நின்ற மக்கள் கைதட்டலுடன் உற்சாகமளித்த காட்சியானது இந்நிகழ்வின் மகுடமாக அமையப்பெற்றது.

50th ltte swiss 29

மேலும், இப் பேரெழுச்சி நிகழ்வில் இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வை வளர்த்தெடுத்து, விடுதலைப் போராட்டத்தின் வீரவரலாற்றை நினைவூட்டும் நோக்கில் தமிழீழ நிகழரசின் கட்டுமானங்களின் காட்சிப்படுத்தலும் இடம்பெற்றது.

தமிழரின் தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கமாகவும், தமிழரது சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் உயிர் மூச்சாகவும், அரசியல் மற்றும் போரியல் சக்தியாகவும் திகழ்ந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் நிகழரசுக் கட்டுமானங்கள், காட்சிகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

இப் பேரெழுச்சி நிகழ்வில் எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் உணர்வுமிக்க எழுச்சி நடனங்கள், பேச்சுக்களோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் தோற்றமும் அதன் பரிணாம வளர்ச்சியும் சார்ந்த விபரணத்தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. மேலும் அனைத்துலகத் தொடர்பக வெளியீட்டுப் பிரிவினால் பாடல்கள் அடங்கிய விரலியும், இப்பெரும் வரலாற்று நினைவுகளைத் தாங்கிய இணைய அஞ்சல்தலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

சுவிஸ் தமிழர் இனஉணர்வாளர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மற்றும் முன்னாள் செயற்பாட்டாளர்கள், போராளிகளின் ஆதரவு, உபஅமைப்புக்கள், கூட்டுமுயற்சி மற்றும் கடினஉழைப்பின் பலனாக மண்டியிடா வீரமும் வீறுகொண்ட எழுச்சியும் நிகழ்வு சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்விற்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவருக்கும் இத்தருணத்தில் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இந் நிகழ்விற்கான பணிகளில் இளையோர்கள் தம்மை இணைத்து செயற்பட்டமை, எமக்கு நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி கையேற்றலுடன், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் ; எழுச்சியுடன் நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button