சுவிட்சர்லாந்தின் சுற்றுலா பகுதிகளில் இரண்டாம் வீடுகள் விலை தொடர்ந்து உயர்வு
சுவிட்சர்லாந்தின் சுற்றுலா பகுதிகளில் இரண்டாம் வீடுகள் விலை தொடர்ந்து உயர்வு
சுவிட்சர்லாந்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் இரண்டாம் வீடுகளுக்கான தேவை இன்னும் குறையாத நிலையில், அவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. நிலசார் ஆலோசனை நிறுவனம் Wüest Partner வெளியிட்ட ஆய்வு அறிக்கையின் படி, 2020ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை இரண்டாம் வீடுகளின் விலை மொத்தத்தில் 46 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதன் பொருள், கடந்த சில ஆண்டுகளில் ஆண்டுதோறும் சராசரியாக 6.5 சதவீதம் உயர்வு ஏற்பட்டுள்ளது என்பதாகும். குறிப்பாக கொரோனா தொற்றுக்குப் பிறகு, நகர வாழ்க்கையிலிருந்து விலகி இயற்கை சூழலுக்கு அருகில் தனி விடுதி அல்லது விடுமுறை வீடு வாங்கும் ஆர்வம் அதிகரித்தது. அதேபோல் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் சுவிட்சர்லாந்தின் பாதுகாப்பான முதலீட்டு சூழல் ஆகியவை இந்த உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளன.

பகுதிவாரியாக பார்க்கும்போது, மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகளில் ஆண்டுக்கு சராசரியாக 8.3 சதவீத உயர்வு பதிவாகியுள்ளது. மேலும் கிரௌவுண்டன் கன்டோனிலும் ஆண்டுக்கு 7.7 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது. வலைஸ் கன்டோனில் கூட ஆண்டுக்கு 6.2 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இப்பகுதிகள் அனைத்தும் மலைப்பகுதி சுற்றுலா, ஸ்கீ ரிசார்ட்கள் மற்றும் இயற்கை அழகுக்காகப் பிரபலமானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் “இரண்டாம் வீடு” எனப்படும் விடுமுறை அல்லது வார இறுதி வீடுகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தாலும், பிரபலமான சுற்றுலா நகரங்கள் மற்றும் ஆல்ப்ஸ் மலைத்தொடர் அருகிலான பகுதிகளில் தேவையும் முதலீட்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதிர்காலத்திலும் இந்தப் போக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக நிலம்துறை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.





