சூரிச் அருகே வீட்டு தீ விபத்து: பல இலட்சம் ஃப்ராங்க் சேதம், உயிரிழப்பு இல்லை சுவிட்சர்லாந்தின் சூரிச் கன்டோனில் உள்ள ஹாகன்ஸ்டால் (Hagenstal) என்ற சிறிய குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட தீ விபத்து, முதலில் வாகன நிறுத்துமிடத்தில் தொடங்கி பின்னர் குடியிருப்பு வீட்டிற்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை சுமார் 5.50 மணியளவில், பாதிக்கப்பட்ட வீட்டில் வசித்து வந்தவர்கள் இணைக்கப்பட்டிருந்த வாகன நிறுத்துமிடம் தீப்பற்றியுள்ளதாக தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கினர். அவசரமாக சம்பவ இடத்துக்கு புறப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுக்கள் அங்கு சென்றடையும் முன்னரே, தீ வீட்டு பகுதிக்கும் பரவி இருந்தது. அதிர்ஷ்டவசமாக, வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. உயிர் சேதம் எதுவும் ஏற்படாதது பெரும் நிம்மதியாக பார்க்கப்படுகிறது. காலை முழுவதும் நடைபெற்ற தீ அணைப்பு நடவடிக்கைகளின் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், மதியம் வரை பல இடங்களில் எரிந்துகொண்டிருந்த சாம்பல் பகுதிகளை அணைக்கும் பணிகள் நீடித்தன. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் பல இலட்சம் சுவிஸ் ஃப்ராங்க்களுக்கு மேல் இருக்கும் என ஆரம்ப கணிப்புகள் தெரிவிக்கின்றன. தீயால் பாதிக்கப்பட்ட வீட்டு இரண்டு பகுதிகளும் தற்போது வசிப்பதற்கு ஏற்ற நிலையில் இல்லாததால், அங்கு வசித்தவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை உள்ளூராட்சி ஏற்பாடு செய்து வருகிறது. தீ விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. Kantonspolizei Zürich தீ விசாரணைப் பிரிவின் நிபுணர்கள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தீ வைத்து எரித்ததாக எந்த சான்றுகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் சூரிச் கன்டோனல் போலீசாருடன் சேர்ந்து யூலாக்டால், வின்டர்தூர் பாதுகாப்பு மற்றும் தலையீட்டு அணி, எல்சாவ்-ஷ்லாட், டுர்பென்தால், உஸ்டர் ஆதார நிலைய தீயணைப்பு படை, சூரிச் கட்டிடக் காப்புறுதி நிறுவனம (GVZ) பிரதிநிதி, கட்டிட பொறியாளர், முன்னெச்சரிக்கையாக வின்டர்தூர் அவசர மருத்துவ சேவை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதி உள்ளிட்ட பல்வேறு அணிகள் இணைந்து பணியாற்றின. © Kapo ZH