Swiss News In Tamil

ஜெனீவாவில் நெப்போலியனின் வைர ஆபரணம் ஏலத்திற்கு

ஜெனீவாவில் நெப்போலியனின் வைர ஆபரணம் ஏலத்திற்கு

சமீபத்தில் பாரிசின் லூவ்ர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான நகைத் திருட்டுக்குப் பிறகு, (Napoleon Bonaparte) நெப்போலியன் போனபார்ட் பயன்படுத்திய உண்மையான ஆபரணங்களும் தற்போது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன. ஆனால், ஜெனீவாவில் நடைபெறும் சோத்பீஸ் (Sotheby’s) நிறுவனத்தின் “Royal & Noble Sale” என்ற சிறப்பு ஏலத்தில் விற்பனைக்கு வரவிருக்கும் நெப்போலியனின் நகைகள், அந்த திருட்டு சம்பவத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த ஏலத்தின் முக்கிய பொருள் 1815ஆம் ஆண்டு புகழ்பெற்ற வாட்டர்லூப் போருக்குச் சென்றபோது நெப்போலியன் அணிந்ததாகக் கூறப்படும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட தொப்பி முள் ஆகும். பிரிட்டனும் ரஷ்யாவும் இணைந்து போராடியதில் நெப்போலியன் தோல்வியடைந்தபின் தப்பிச் செல்லும் நேரத்தில், இந்த ஆபரணம் அவர் கைவிடப்பட்டதாகவும் பின்னர் ரஷ்ய படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

போருக்குப் பின்னர் மூன்றாம் நாளிலேயே, அந்த ஆபரணம் ரஷ்ய அரசர் மூன்றாம்  ஃப்ரெடரிக் வில்லியம் அவர்களுக்கு போர்க் கோப்பையாக வழங்கப்பட்டது. பின்னர் அது ஜெர்மன் பேரரசர்களின் வசம் சென்றதுடன், காலப்போக்கில் ஒரு தனியார் சேகரிப்பாளரின் களுக்கு சென்றது.

சுமார் 45 மில்லிமீட்டர் விட்டமுள்ள இந்த வட்ட வடிவ ஆபரணத்தின் நடுப்பகுதியில் 13.04 காரட் எடையுடைய ஓவல் வடிவ வைரம் பொருத்தப்பட்டுள்ளதுடன், அதன் சுற்றிலும் பழைய மைன் கட் பாணியில் வெட்டப்பட்ட சிறிய வைரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு சுவிஸ் ஃப்ராங்க் 1,20,000 முதல் 2,00,000 வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அரிய ஆபரணத்துடன் பல்வேறு அரச குடும்பங்களின் நகைகளும் இடம்பெறும் “Royal & Noble Sale” ஏலம் நவம்பர் 12ஆம் தேதி ஜெனீவாவின் மண்டரின் ஓரியண்டல் ஹோட்டலில் நடைபெற உள்ளது. வரலாற்று முக்கியத்துவமும் கலைமிகு பண்பும் கலந்த இந்த நகை, உலகளாவிய சேகரிப்பாளர்களிடையே பெரும் போட்டியை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

© KeystoneSDA

Related Articles

Back to top button