லுகானோவில் முதியவர்களிடம் தொலைபேசி மோசடி.!!
லுகானோவில் முதியவர்களிடம் தொலைபேசி மோசடி : இருவர் கைது
லுகானோவில் முதியவர்களிடம் தொலைபேசி மோசடி.!! கன்டோன் லுகார்னோவின் மல்கண்டோன் நகரத்தில் ‘போலி தொலைபேசி மோசடிகளை மேற்கொண்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.’
கைது செய்யப்பட்டவர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்று பல தடவைகள் முதியவர்கள் மீதான மோசடி முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
குற்றவாளிகள் மருத்துவ வல்லுநர்கள் அல்லது காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட அல்லது போக்குவரத்து விபத்தில் சிக்கிய நெருங்கிய உறவினருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அல்லது ஜாமீன் வழங்குவதற்காக ஒரு பெரிய தொகையை கடுமையாகக் கோருகின்றனர்.

கிடைக்கும் குறுகிய நேரத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவருக்கு அழுத்தம் கொடுத்து, வீட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணம் அல்லது பொருட்களை உடனடியாக ஒப்படைக்கும்படி வற்புறுத்துகின்றனர்.
இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் 33 வயதான மற்றும் 31 வயதான இருவரும் போலந்து உரிமத் தகடுகளுடன் கூடிய காரில் பொன்டே தெரசா பாஸில் (Ponte Tresa-Pass) சுவிட்சர்லாந்திற்குள் நுழையும் போது UDSC ஊழியர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கடுமையான மோசடி முயற்சிகளில் ஈடுபட்டமைக்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். சுவிட்சர்லாந்தில் இந்த வகையான மோசடி சமீபத்திய நாட்களில் கணிசமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





