Swiss News In Tamil

சூரிச்சில் பெண்களுக்கு எதிரான தெருமோசடி அதிகரிப்பு – சமூகத்தில் அதிர்ச்சி

சூரிச்சில் பெண்களுக்கு எதிரான தெருமோசடி அதிகரிப்பு – சமூகத்தில் அதிர்ச்சி

சூரிச் நகரில் பெண்கள் தெருக்களில் ஓடும்போது, சைக்கிள் ஓட்டும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது அடிக்கடி விசில் அடித்தல், கேலி கூச்சல், தவறான பார்வைகள் போன்ற தொந்தரவு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக பலர் புகார் தெரிவித்து உள்ளனர்.

சில பெண்கள் அனுபவத்தை பகிர்ந்தபோது, “காரிலிருந்து ஆண்கள் கூச்சல் போட்டு இழிவான வார்த்தைகள் கூறுவது, ஓடிக்கொண்டிருக்கும் போது அவமானப்படுத்துவது, சைக்கிளில் செல்லும் போது கூட பின்தொடருவது போன்ற சம்பவங்கள் தினசரி வாழ்வையே பாதிக்கின்றன” என தெரிவித்தனர்.

நிபுணர்கள் கூறியதாவது, இத்தகைய catcalling அல்லது தெருமோசடி என்பது “பாராட்டு” அல்ல, பெண்களை அச்சுறுத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வன்முறைச் செயல் என எச்சரித்துள்ளனர். குறிப்பாக விளையாட்டு செய்யும் போது பெண்களின் உடல் அதிகம் வெளிப்படும் காரணத்தால், இவ்வகை தொந்தரவு அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்டவர்கள் இயன்றால் சம்பவத்தைக் குறிப்பிட்டு புகார் செய்ய வேண்டும். அதேசமயம், பொதுமக்கள் துணிவுடன் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். “ஆண்கள் தங்களது நண்பர்கள், சக பணியாளர்கள், குழந்தைகள் முன்னிலையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட செயல்களை பொறுத்துக் கொள்ளாமல், மாற்றம் உருவாக்கும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும்” என சமூக நல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.

@SDA

Related Articles

Back to top button