சுவிட்சர்லாந்தில் மாடுகளால் மிதிக்கப்பட்ட பாதசாரி உயிர் பிழைத்த அதிசயம்
சுவிட்சர்லாந்தில் மாடுகளால் மிதிக்கப்பட்ட பாதசாரி உயிர் பிழைத்த அதிசயம்
கடந்த வெள்ளிக்கிழமை, வெளட் (Vaud) பகுதியைச் சேர்ந்த ஒரு பயணிக்கு, ஜுரா மாகாணத்தில் நடந்துள்ள சம்பவம் வாழ்நாளில் மறக்க முடியாத சோக அனுபவமாக மாறியது.
நாய் ஒன்றுடன் நடந்து சென்ற போது, மாடுகளின் ஒரு கூட்டம் திடீரென அவரை தாக்கியது. இந்த தாக்குதலால் அவர் கால்உடைப்பு, நெஞ்செலும்பு முறிவு, தலையில் காயம் மற்றும் பலத்த அச்சத்துடன் தீவிரமாக காயமடைந்துள்ளார்.

சம்பவம் பிரான்ஸ் எல்லைக்கு அருகிலுள்ள கிராமப்பகுதியில் நடைபெற்றது. மாடுகள் முதலில் நாயைத் திரும்பத் திரும்ப விரட்டியது. அதன்பின் அது திடீரென அதன் உரிமையாளர் மீதே திரும்பி தாக்கியது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரது அலறல் சத்தங்களை அருகிலிருந்த ஒரு தம்பதியர் கேட்டு, உடனடியாக அவசர சேவைகளை அழைத்தனர். அதன்மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது. இவ்வகை மாடுத் தாக்குதல்களில், நாய்கள் பெரும்பாலும் மாடுகளுக்கு அச்சமூட்டும் காரணியாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கையில்
- நாய்களை கடைசிவரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
- மாடுகளுக்கு அருகில் அமைதியாக நடந்து செல்ல வேண்டும். என அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.





