Swiss News In Tamil

பேர்ன் மாநில போலீசாரின் சைக்கிள் சோதனை – ஆறு வாரத்தில் 685 அபராதங்கள்

பேர்ன் மாநில போலீசாரின் சைக்கிள் சோதனை – ஆறு வாரத்தில் 685 அபராதங்கள்

கடந்த ஆறு வாரங்களில், சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநில போலீசார் நகர பகுதிகளில் திட்டமிட்ட சைக்கிள் சோதனைகளை நடத்தியுள்ளனர். 2025 மே 19 முதல் 2025 ஜூன் 27 வரை, “நகரப் போக்குவரத்து பாதுகாப்பு” என்ற வருடாந்திர முக்கிய திட்டத்தின் கீழ் பல்வேறு சோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில் மாநிலம் முழுவதும் போக்குவரத்து மிகுந்த முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர். சோதனையில் 478 பேர் சிக்னலில் சிவப்பு விளக்கை மீறி சென்றது தெரியவந்தது. மேலும், 119 பேர் முன்னுரிமை விதிகளை பின்பற்றவில்லை.

20 சந்தர்ப்பங்களில் சைக்கிள் ஓட்டிகள் தவறாக நடைபாதையை பயன்படுத்தினர். 11 பேர் விளக்கில்லாமல் சைக்கிள் ஓட்டி ஆபத்து ஏற்படுத்தினர். கூடுதலாக, 14 பேர் கைப்பேசியில் பேசிக்கொண்டே சைக்கிள் ஓட்டி போக்குவரத்து சட்டத்தை மீறியதாகப் போலீசார் தெரிவித்தனர்.

மொத்தமாக 685 அபராதக் சீட்டுகள் வெளியிடப்பட்டன. 32 பள்ளி வயதினர் சாலை பாதுகாப்பு கல்விக்கு அழைக்கப்பட்டனர். மேலும், ஏராளமான சைக்கிள் ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு உரைகள் கூறி, போக்குவரத்து நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

பேர்ன் மாநில போலீசார், நகர பகுதிகளில் சைக்கிள் பயன்படுத்தும் அனைவரும் விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

@Kapo BE

Related Articles

Back to top button