சூரிச்சில் முகமூடி கொள்ளையர்கள் : இருவரை கைது செய்த போலீசார்
சூரிச்சில் முகமூடி கொள்ளையர்கள் : இருவரை கைது செய்த போலீசார்
சூரிச்சில் முகமூடி கொள்ளையர்கள் : இருவரை கைது செய்த போலீசார் நேற்று வியாழக்கிழமை மாலை சூரிச்சிலுள்ள ஹவுசன் ஆம் அல்பிஸ் (Hausen am Albis) நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து, கூட்டாளியின் உதவியுடன் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருகையில், வியாழன் மாலை 6 மணியளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து ஊழியர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார் . பணத்தை எடுத்துக் கொண்டு கடையை விட்டு ஓடிய அவர், அருகில் இருந்த வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.
சூரிச் கன்டோனல் பொலிசாரின் விசாரணைகள் மற்றும் தகவலறிந்தவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய தப்பியோடிய ஓட்டுநரான 27 வயதான லெபனான் பெண் அடையாளம் காணப்பட்டார். சூரிச் மாகாணத்தில் அவர் வசிக்கும் இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் விசாரணை மற்றும் மேலதிக தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, கன்டோனல் பொலிசார் பிறகு ஆர்காவ் மாகாணத்தில் 20 வயது சோமாலி இளைஞனைக் கைது செய்தனர்.
ஹவுசென் ஆம் அல்பிஸில் அவர் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இருவரும் அரசு வக்கீல் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலதிக விசாரணைகள் கன்டோனல் பொலிஸ் மற்றும் சூரிச்-லிம்மாட் அரசு வழக்கறிஞர் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





