தபால் அலுவலகத்தை கொள்ளையிட முயன்றவர்கள் தப்பிச்செல்லும் போது விபத்து
தபால் அலுவலகத்தை கொள்ளையிட முயன்றவர்கள் தப்பிச்செல்லும் போது விபத்து திங்கட்கிழமை மாலை, செயின்ட் கேலனின் ஓபெரியட்டில் உள்ள ஸ்டாட்ஸ்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள தபால் நிலையத்தில் இரண்டு பேர் கொள்ளையடிக்க முயன்றனர். பின்வாசல் வழியாக உள்ளே நுழைந்த சந்தேக நபர்கள், 19 வயதுடைய ஊழியரை மிரட்டி கட்டிவைத்துள்ளனர்.
மூன்றாவது நபர் தலையிட்டமையினால் அவ்விடத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதன் போது சந்தேக நபர்களில் ஒருவர் ஆயுதத்தைக் காட்டி மிரட்ட ஆரம்பித்துள்ளார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை, பணத்தையும் திருடாமல் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
பல பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய அளவிலான வேட்டைக்குப் பிறகு, செயின்ட் மார்கிரெதன் அருகே A13 நெடுஞ்சாலையில், மாலை 6:40 மணிக்கு முன்னதாக, St.Gallen கன்டோனல் போலீஸ் ரோந்து மூலம் அடையாளம் காணப்பட்டது.


ரைனெக்கில் (Rheineck) நெடுஞ்சாலையில் இருந்து வெளியேறிய சந்தேக நபர்களை போலீசார் பின்தொடர்ந்து, ஒரு ரவுண்டானாவைச் சுற்றி தவறான திசையில் ஓட்டிச் சென்று, நெடுஞ்சாலையில் மீண்டும் நுழைய முயன்றபோது St.Gallen கன்டோனல் போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும்,உடன் பயணித்தவரும் தவறி விழுந்து காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவரும் அவசர சிகிச்சைப் பிரிவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பத்திரிகை செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட இரண்டு குற்றவாளிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. வாக்குமூலமும் பெறமுடியாமையினால் அவர்கள் பற்றிய எதுவித தகவல்களும் வெளியாகவில்லை.





