பேருந்தின் அவசர பிரேக்கிங்கால் காயமடைந்த 5 பயணிகள்
பேருந்தின் அவசர பிரேக்கிங்கால் காயமடைந்த 5 பயணிகள்
பேருந்தின் அவசர பிரேக்கிங்கால் காயமடைந்த 5 பயணிகள் கன்டோன் சுக், Zukerland பகுதியில் பொதுப் போக்குவரத்து பேருந்து ஒன்றை அதன் சாரதி அவசர பிரேக் பயன்படுத்தியமையால் 5 பயணிகள் காயம் அடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றதாக சுக் கன்டோனின் சட்ட அமலாக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு வாகனம் போக்குவரத்து சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கு சற்று முன்னர், பேருந்து பாதையில் நுழைந்தது.

இதனால் பேருந்தை சாரதி அவசர அவசரமாக நிறுத்தினார். இதனால் பேருந்தில் இருந்த 5 பயணிகள் காயமடைந்தனர்.
அவர்களின் மூவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து, 62 வயதான சாரதி சம்பவத்திற்குப் பிறகு தனது பயணத்தைத் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:- (c)Zug போலீஸ்





