Swiss News In Tamil

சுவிட்சர்லாந்தில் ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

An increase in the number of asylum seekers in Switzerland

சுவிட்சர்லாந்தில் ஏதிலி கோரிக்கையாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் பெட் ஜேன்ஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஏதிலி கோரிக்கையாளர் நிலையங்களில் இந்த ஆண்டு சுமார் மூவாயிரம் விண்ணப்பங்கள் அதிகளவில் முன்வைக்கப்படும் என அவர் எதிர்வுகூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்தில்

ஏதிலி கோரிக்கையாளர்களுக்கு போதியளவு தங்குமிட வசதிகளை செய்து கொடுப்பதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவசர ஏற்பாடாக இவ்வாறு தங்குமிட வசதிகளை மேம்படுத்தும் நடவடடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button