ஆர்காவ் கன்டோனின் ஃப்ரிக்கில் நள்ளிரவு திருட்டு முயற்சி: சந்தேகநபர் கைது
ஆர்காவ் கன்டோனின் ஃப்ரிக்கில் நள்ளிரவு திருட்டு முயற்சி: சந்தேகநபர் கைது

ஆர்காவ் கன்டோனின் ஃப்ரிக்கில் நள்ளிரவு திருட்டு முயற்சி: சந்தேகநபர் கைது
ஆர்காவ் கன்டோனின் ஃப்ரிக் (Frick) பகுதியில் நள்ளிரவில் இடம்பெற்ற திருட்டு முயற்சியுடன் தொடர்புடைய ஒருவரை Kantonspolizei Aargau கைது செய்துள்ளது.
2026 மே 26 ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின்னர், ஃப்ரிக்கில் உள்ள தனி வீட்டொன்றின் கண்காணிப்பு காணொளியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த ஒருவர் பதிவாகியிருந்தார். அவர் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை சோதனை செய்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கண்காணிப்பு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக போலீசாரை தொடர்புகொண்டனர். அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, Oberes Fricktal பிராந்திய போலீஸ் ரோந்து குழு அருகிலுள்ள வீட்டின் முன்பாக ஒருவர் தோட்டக் கத்தரியை பயன்படுத்தி மின்சார மிதிவண்டி (E-Bike) பூட்டை உடைக்க முயன்றதை கண்டறிந்தது.

அந்த நபர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 21 வயதுடைய எகிப்தியர் என்றும், அவர் சுவிட்சர்லாந்தில் தஞ்சம் கோரியவராக பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், ஏற்கனவே தேடப்பட்டவர்களின் பட்டியலிலும் இடம்பெற்றிருந்ததாக தெரியவந்துள்ளது.
இவர் வழக்கமாக நடைபெறும் இரவுநேர திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் ஆர்காவ் கன்டோனல் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். © Kapo AG






