தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை… பொதுநிகழ்வுகளில் இருந்து இராணுவத்தை விலக்க சுவிஸ் அரசு பரிசீலனை!
தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை... பொதுநிகழ்வுகளில் இருந்து இராணுவத்தை விலக்க சுவிஸ் அரசு பரிசீலனை!

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை… பொதுநிகழ்வுகளில் இருந்து இராணுவத்தை விலக்க சுவிஸ் அரசு பரிசீலனை!
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் பெரிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு இனி இராணுவ வீரர்கள் பாதுகாப்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபடுத்தப்படாமல் போகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டாட்சி மன்றத்தின் புதிய வழிகாட்டுதல் வரைவு படி, தற்போதைய பாதுகாப்புச் சூழலில் சுவிஸ் இராணுவத்தின் திறன்களை தேசிய பாதுகாப்பிற்காகவே முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி, 17 காலாட்படைப் பட்டாலியன்களில் நான்கு மட்டுமே முழுமையாக செயல்படும் நிலையில் உள்ளன. மேலும், உபகரணங்கள் மற்றும் செயல்பாட்டு வளங்களிலும் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், பனிச்சறுக்கு உலகக் கோப்பை, சுவிஸ் மல்யுத்த விழா உள்ளிட்ட முக்கிய விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு இராணுவ ஆதரவை நிறுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
ஆனால், இந்த யோசனைக்கு அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் பங்கேற்பு பல நிகழ்வுகள் வெற்றிகரமாக நடைபெற உதவுவதோடு, வீரர்களுக்குப் பயிற்சியாகவும், பொதுமக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
எனினும், பேரிடர் நிவாரணம் மற்றும் முக்கிய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இராணுவ ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் வரை நாடு முழுவதும் விவாதம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





