நிரந்தர விலை குறைப்பு” என்று சொல்லி ஏமாற்றமா? ALDI மீது SECO அதிரடி நடவடிக்கை!
நிரந்தர விலை குறைப்பு" என்று சொல்லி ஏமாற்றமா? ALDI மீது SECO அதிரடி நடவடிக்கை!

நிரந்தர விலை குறைப்பு” என்று சொல்லி ஏமாற்றமா? ALDI மீது SECO அதிரடி நடவடிக்கை!
சுவிட்சர்லாந்தில் பிரபல தள்ளுபடி விற்பனை நிறுவனமான ALDI, தனது “நிரந்தர விலை குறைப்பு” என்ற விளம்பர வாக்குறுதியால் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.
கடந்த ஆண்டு, 200 கிராம் ஆர்கானிக் சால்மன் ஃபில்லட்டின் விலையை 8.49 சுவிஸ் பிராங்கில் இருந்து 6.99 பிராங்காக நிரந்தரமாகக் குறைப்பதாக ALDI விளம்பரம் செய்தது. பின்னர் அந்த விலை 6.89 பிராங்காகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் சில மாதங்களிலேயே அதே பொருளின் விலை மீண்டும் 7.45 சுவிஸ் பிராங்காக உயர்ந்தது. இதையடுத்து, இது வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் விளம்பரமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பொருளாதார விவகாரங்களுக்கான மாநில செயலகமான SECO விசாரணையைத் தொடங்கியுள்ளது.
SECO-வின் விளக்கப்படி, ஒரு பொருளின் விலை “நிரந்தரமாகக் குறைக்கப்பட்டது” என்று விளம்பரப்படுத்தப்பட்டால், அந்த விலை நீண்டகாலமாகவே தொடர வேண்டும். பின்னர் மீண்டும் உயர்த்துவது, நியாயமற்ற போட்டி தொடர்பான சட்டத்தை மீறுவதாகக் கருதப்படலாம்.

இதுதொடர்பாக ALDI-க்கு அதிகாரப்பூர்வ எச்சரிக்கைக் கடிதமும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ALDI, உணவுப் பொருட்களின் விலைகள் சர்வதேச சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப மாறுவது இயல்பானது என்றும், தற்போதைய விலையும் ஆரம்ப விலையை விட இன்னும் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இதேபோன்ற தவறான தள்ளுபடி அறிவிப்புகள் தொடர்பாக Coop மற்றும் Migros போன்ற பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்களிடமும் SECO ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.





