Local Swiss News

5 மாதங்கள் நீண்ட கொடுமை… 13 வயது சிறுவனிடம் மிரட்டிப் பணம் பறித்த கும்பல் சிக்கியது!

5 மாதங்கள் நீண்ட கொடுமை... 13 வயது சிறுவனிடம் மிரட்டிப் பணம் பறித்த கும்பல் சிக்கியது!

5 மாதங்கள் நீண்ட கொடுமை… 13 வயது சிறுவனிடம் மிரட்டிப் பணம் பறித்த கும்பல் சிக்கியது!

ஆஸ்திரியாவின் லின்ஸ் நகரில் 13 வயது சிறுவன் ஒருவருக்கு எதிராக நடைபெற்ற கொடூரமான மிரட்டல் மற்றும் பணம் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களாக, பல பதின்ம வயது இளைஞர்கள் அந்தச் சிறுவனை தொடர்ந்து மிரட்டி பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பறித்ததாக காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவன் மீது மரண மிரட்டல்கள் விடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்தில் அரிவாள் வைத்து அச்சுறுத்தியதாகவும், மின் அதிர்ச்சி கொடுத்து சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தாக்குதல் நடக்கும் என்ற பயத்தில், பலமுறை பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை அவர் ஒப்படைத்துள்ளார்.

13J 111

இந்த சம்பவம் தொடர்பாக முதலில் வெல்ஸைச் சேர்ந்த 15 வயது ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவன் அடையாளம் காணப்பட்டார். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், முக்கிய சந்தேக நபரான லின்ஸைச் சேர்ந்த 15 வயது சிரிய இளைஞர் நீதிமன்ற கைது ஆணையின் பேரில் ஜூலை 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதும் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஜூலை 5ஆம் தேதி நடந்த மற்றொரு சம்பவத்தில், 13 வயது சிறுவனை தாக்கி அவரது வீட்டுக்கே அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக மேலும் மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பணம் இல்லாததால், சிறுவன் மூன்று வாசனைத் திரவியங்களை கொடுத்து உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கொள்ளை, திருட்டு மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் உள்ளிட்ட பல கோணங்களில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button