Swiss News In Tamil

சிரியா மீதான தடைகளை சுவிட்சர்லாந்து நீக்குவதாக அறிவிப்பு

சிரியா மீதான தடைகளை சுவிட்சர்லாந்து நீக்குவதாக அறிவிப்பு

சிரியா மீது விதிக்கப்பட்டிருந்த சில பொருளாதார தடைச்சட்டங்களைச் சுவிட்சர்லாந்து அரசு தற்போது சலுகையாக்கியுள்ளது. கடந்த மே மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த அதே போன்ற முடிவை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தும் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது.

இதன்படி, சிரியாவின் மத்திய வங்கியை தடைப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி மன்றமான பெடரல் கவுன்சில் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இதனால், அந்த வங்கியின் சொத்துக்களும் பொருளாதார வளங்களும் இனிமேல் முடக்கப்படமாட்டாது.

இதற்கு கூடுதலாக, சிரியாவின் பொருளாதார மீட்சி மற்றும் உள்நாட்டு நிர்மாணத் தேவைகளுக்கு முக்கியமானது எனக் கருதப்படும் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் மீதும் பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டுள்ளன. புதிய அரசாணை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

638612930 highres

மேலும், சில நிதி சேவைகள், மதிப்புமிக்க உலோகங்கள் மற்றும் வர்த்தகம் மீதான தடைச்சட்டங்களும் நீக்கப்பட்டுள்ளன. எனினும், முன்னாள் சிரியா அரசாங்கத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் மீது விதிக்கப்பட்டிருந்த இலக்குவைத்த தடைச் சட்டங்கள் தொடரும் என்றும், இராணுவ உபகரணங்கள் மற்றும் அடக்குமுறைக்கு பயன்படுத்தக்கூடிய கருவிகள் மீதான ஏற்றுமதி தடைகளும் அந்தி நிலை நீடிக்கும் என்றும் சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு மே மாதம், சிரிய அரசு பொதுமக்கள் மீது பயங்கரமான தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைச் சட்டங்களை சுவிட்சர்லாந்து முதன்முதலில் ஏற்றுக்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Back to top button