ஹன்டா வைரஸ் பரவல் அபாயம் இல்லை – சுவிஸ் சுகாதார அதிகாரிகள் உறுதி

ஹன்டா வைரஸ் பரவல் அபாயம் இல்லை – சுவிஸ் சுகாதார அதிகாரிகள் உறுதி
சுவிட்சர்லாந்தில் தற்போது ஹன்டா வைரஸ் பரவல் பெருந்தொற்று அபாயம் எதுவும் இல்லை என சுகாதார அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
தற்போது Zurich நகரில் ஒருவருக்கு ஹன்டா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மேலும் நால்வர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இந்த சூழ்நிலை குறித்து விளக்கம் அளித்த Federal Office of Public Health (FOPH) இன் புதிய தொற்றுநோய்கள் பிரிவு தலைவர் Claudio Zaugg, “சுவிட்சர்லாந்தில் அவ்வப்போது தனிப்பட்ட ஹன்டா வைரஸ் சம்பவங்கள் பதிவாகுவது சாதாரணமானது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இது Covid-19 போல புதிய அல்லது அறியப்படாத வைரஸ் அல்ல. எனவே இத்தகைய சம்பவங்களை கட்டுப்படுத்துவதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்தில் கட்டாய சுகாதார காப்பீட்டு கட்டணங்கள் 2027ஆம் ஆண்டிலும் மேலும் உயரக்கூடும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. Comparis வெளியிட்ட பகுப்பாய்வின்படி, 2027ஆம் ஆண்டில் சுகாதார காப்பீட்டு பிரீமியங்கள் சராசரியாக 3.7 சதவீதம் உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இது 2026ஆம் ஆண்டில் ஏற்பட்ட 4.4 சதவீத உயர்வை விட சற்றுக் குறைவாக இருந்தாலும், குடும்பங்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சுவிஸ் அரசு 2027ஆம் ஆண்டிற்கான இறுதி சுகாதார காப்பீட்டு கட்டணங்களை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது.





