சூரிக்கில் மயக்கநிலையிலிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு – ஆப்கான் நபருக்கு சிறைத்தண்டனை
சூரிக்கில் மயக்கநிலையிலிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு – ஆப்கான் நபருக்கு சிறைத்தண்டனை

சூரிக்கில் மயக்கநிலையிலிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கு – ஆப்கான் நபருக்கு சிறைத்தண்டனை
சூரிக் (Zürich) நகரிலுள்ள Bäckeranlage பூங்கா பொதுக் கழிப்பறையில் கடுமையான மது போதையில் இருந்த பெண் ஒருவர் குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 28 வயதுடைய ஆப்கானிஸ்தான் நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது பூங்காவிற்கு வந்திருந்த பெண் ஒருவர், பொதுக் கழிப்பறைக்குள் பல ஆண்கள் மயக்கநிலையிலிருந்த பெண்ணை துஷ்பிரயோகம் செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவர் உடனடியாக கதவைத் திறந்து கூச்சலிட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், மற்றொரு நபர் அருகிலிருந்த கழிப்பறையிலிருந்து வெளியே வந்து, போலீசாரை அழைக்க வேண்டாம் என கூறியதுடன், அந்த பெண்ணுக்கு கோகெய்னும் வழங்க முயன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில், குறித்த 28 வயது ஆப்கான் நபரும் அந்த மயக்கநிலையிலிருந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கு Zürich நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட நபர் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
ஆனால், சம்பவத்துக்குப் பின்னர் போலீசார் அந்த பெண்ணை கழிப்பறைக்குள் மயக்கநிலையிலேயே கண்டுபிடித்தனர். அப்போது அவரது இரத்தத்தில் 3.4 ப்ரொமில் அளவுக்கு மது இருந்ததாகவும், அவர் மதுவுக்கு அடிமையானவராகவும் borderline மனநிலை கோளாறால் பாதிக்கப்பட்டவராகவும் பின்னர் தெரியவந்தது.
மேலும், ஆரம்ப விசாரணைகளில் அந்த நபர் பெண்ணின் மீது பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டிருந்ததும் நீதிமன்றத்தில் நினைவூட்டப்பட்டது.
அத்துடன், குறித்த நபருக்கு சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே திருட்டு, சேதப்படுத்தல், தாக்குதல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான பல குற்றப் பதிவுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியில், நீதிமன்றம் அவரது விளக்கத்தை நம்ப மறுத்ததுடன், அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும், எட்டு ஆண்டுகள் சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தும் உத்தரவும் வழங்கியுள்ளது.
© Kapo ZH






