குழந்தைகளுடன் நாடு கடத்தப்பட்ட குர்திஷ் பெண்… துருக்கியில் சிறை!
குழந்தைகளுடன் நாடு கடத்தப்பட்ட குர்திஷ் பெண்… துருக்கியில் சிறை!

குழந்தைகளுடன் நாடு கடத்தப்பட்ட குர்திஷ் பெண்… துருக்கியில் சிறை!
சுவிட்சர்லாந்தில் இருந்து துருக்கிக்கு நாடு கடத்தப்பட்ட குர்திஷ் பெண், அங்கு சென்றவுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
பஹார் யால்சின்காயா என்ற குர்திஷ் பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தார்.
ஆனால், ஆகஸ்ட் 4ஆம் தேதி சூரிச்சில் உள்ள திருப்பி அனுப்பும் மையத்திலிருந்து அவர் துருக்கிக்கு நாடு கடத்தப்பட்டதாக அவரது சட்டப் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
இஸ்தான்புல் விமான நிலையத்தை சென்றடைந்த உடனேயே அவர் கைது செய்யப்பட்டதுடன், விசாரணைக்கு முந்தைய தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சுவிட்சர்லாந்தில் பிறந்த அவரது 15 மாத குழந்தை தற்போது அவருடன் இருப்பதாகவும், மற்றொரு ஐந்து வயது குழந்தை தாயிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

துருக்கியில், பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ததாக அவருக்கு எதிராக விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
அவரது சமூக வலைதள பதிவுகளில் குர்திஷ் புத்தாண்டு வாழ்த்துகள், குர்திஷ் உரிமைகள் தொடர்பான கருத்துகள் மற்றும் குர்திஷ் பெண்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததாக வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சுவிஸ் அதிகாரிகள் இந்த வழக்கை சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு பரிசீலித்ததாகவும், தற்போதைய சட்டக் கட்டமைப்பின்படி நாடுகடத்தல் முடிவு எடுக்கப்பட்டதாகவும் SEM தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சுவிஸ் நாடுகடத்தல் நடைமுறைகள் மீண்டும் கேள்விக்குள்ளாகியுள்ளன.





