சுவிஸ் தபால் சேவைக்கு ஆண்டுக்கு CHF 85 மில்லியன் இழப்பு – புதிய மாற்றங்கள் அவசியம்
சுவிஸ் தபால் சேவைக்கு ஆண்டுக்கு CHF 85 மில்லியன் இழப்பு – புதிய மாற்றங்கள் அவசியம்
சுவிட்சர்லாந்தின் அரசுடைமையான Swiss Post நிறுவனம் ஆண்டுதோறும் சுமார் 85 மில்லியன் சுவிஸ் பிராங்க் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு பாரம்பரிய கடிதங்கள் மற்றும் செய்தித்தாள் விநியோகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகிறது.
நிறுவனத் தலைவர் Grieder அளித்த பேட்டியில், இந்த இழப்புகளை சமாளிக்க புதிய வர்த்தக சேவைகள் மீது கவனம் செலுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள 700க்கும் மேற்பட்ட தபால் நிலையங்களுக்கு தினமும் சுமார் 2.5 லட்சம் பேர் வருகை தருவதை பயன்படுத்தி, கூடுதல் சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் முக்கியமாக PostFinance உடன் இணைந்து நிதிசார் சேவைகளை தபால் நிலையங்களில் அதிகப்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன. மேலும், சமீபத்தில் அறிமுகமான டிஜிட்டல் கடித சேவைகளும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தபால் நிலையங்களின் எதிர்காலம் அவற்றின் லாபகரத்தன்மையைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது ஒரு கடிதத்தை தபால் நிலையத்தில் செயலாக்கும் செலவு, தபால் முத்திரை விலையை விட அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2028க்கு பிறகு எத்தனை தபால் நிலையங்கள் தொடரும் என்பது அவற்றின் வருவாய் திறனைப் பொறுத்தே இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், சேவையை நிலைநிறுத்த கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாக இருக்கலாம் எனவும், இதுகுறித்து விலை கண்காணிப்பு அமைப்புடன் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.






