Local Swiss News

பேசல் மிருகக்காட்சிசாலையில் சோகம்: 4 நாள் குட்டி கொரில்லாவை தந்தையே கடித்துக் கொன்ற அதிர்ச்சி!

பேசல் மிருகக்காட்சிசாலையில் சோகம்: 4 நாள் குட்டி கொரில்லாவை தந்தையே கடித்துக் கொன்ற அதிர்ச்சி!

பேசல் மிருகக்காட்சிசாலையில் சோகம்: 4 நாள் குட்டி கொரில்லாவை தந்தையே கடித்துக் கொன்ற அதிர்ச்சி!

சுவிட்சர்லாந்தின் பேசல் மிருகக்காட்சிசாலையில் இதயத்தை நொறுக்கும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெறும் நான்கு நாட்களே ஆன பெண் குட்டி கொரில்லா, அதன் தந்தையான 14 வயது சில்வர்பேக் Silberrück கொரில்லா “யேபா” Yeba தாக்கியதில் உயிரிழந்துள்ளது.

மிருகக்காட்சிசாலை நிர்வாகத்தின் தகவலின்படி, குட்டியின் தாயான 37 வயது ஜோவாஸ், பிறந்த நாளிலிருந்தே இயல்பான தாய்மைப் பராமரிப்பை வழங்கி வந்தார். ஆனால் செவ்வாய்க்கிழமை, தந்தை யேபா குட்டியை தனது கைகளில் எடுத்தபோது, தாய் அதை மீண்டும் பெற முயன்றதால் இரு பெரிய கொரில்லாக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலின் போது, யேபா குட்டியின் மார்புப் பகுதியில் கடித்ததால், அந்தச் சிறிய உயிர் பரிதாபமாக உயிரிழந்தது.

இதற்குப் பிறகும், தாய் ஜோவாஸ் தனது இறந்த குட்டியை இன்னும் தன்னுடன் சுமந்துகொண்டே இருப்பதாக மிருகக்காட்சிசாலை தெரிவித்துள்ளது. இது கொரில்லாக்களிடம் இயற்கையாகக் காணப்படும் துக்கத்தை வெளிப்படுத்தும் நடத்தையாக கருதப்படுவதால், இதில் தலையிடப்படவில்லை.

16J 2

இந்தச் சம்பவம் நிகழ்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே, 11 வயதான ஆண் கொரில்லா “மொபாலி”, யேபா ஏற்படுத்திய கடுமையான கடி காயங்களால் கருணைக்கொலை செய்யப்பட்டிருந்தது. இதனால், சில நாட்களுக்குள் அதே குழுவில் இரண்டு கொரில்லாக்கள் உயிரிழந்துள்ளன.

விலங்கியல் நிபுணர்களின் கூற்றுப்படி, “சிசுக்கொலை” எனப்படும் குட்டிகளைக் கொல்லும் நடத்தை, சில கொரில்லா குழுக்களில் அறிவியல் ரீதியாக பதிவுசெய்யப்பட்ட இயற்கையான சமூக நடத்தையாகும். இருப்பினும், இதற்கான காரணங்கள் ஒவ்வொரு சூழலிலும் மாறுபடக்கூடும்.

தற்போது, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் நிபுணர்களுடன் இணைந்து கொரில்லா குழுவின் நடத்தையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மற்றொரு குட்டி விரைவில் பிறக்கவிருப்பதால், அதன் பாதுகாப்பு தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button